இந்திய மகளிரணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் து மிதாலி ராஜ் ஆனால் தற்போது கேப்டனாக இல்லை.அணியில் தொடர்ந்து விளையாடி மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை குவித்த ஒரே இந்திய கிரிக்கெட் விராங்கனை ஆவார்.இவர் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு அது சர்ச்சையாக வெடித்துள்ளது.அவ்வாறு அவர் நீக்கப்பட்டதைப் போலத்தான் இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் கேப்டன்ஷி கொடுக்கும் விவகாரத்திலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அதிகார தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் (2018) கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனி தலைமையில்களமிறங்கிய இந்தியாவின் 200-வது போட்டியில் அது ஆனால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.ஆனால் அதற்கு முன்பே கடந்த 2017-ம் ஆண்டே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக தோனி விலகிவிட்டார். அந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், இந்தியாவின் மற்றொரு வீரரான ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனிடையே அந்த தொடரில் ரோஹித் மற்றும்ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன்பிறகே தோனி இந்திய கேப்டனாக களமிறங்கினார்.
இதே போல தான் மகளிரணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் டி-20 அணியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த நீக்கம் தொடர்பான அதிகார தலையீடு இருந்ததை நாட்டு மக்களே அறிந்து கொண்டனர்.இதே போல தான் தோனிக்கும் கேப்டன் பதவி கொடுக்கும் விவகாரத்தில் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களின் அதிகார தலையீடு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளிர் அணி தேர்வைப் போன்றே இந்திய ஆடவர் கிரிக்கெட் அணித் தேர்விலும் சில பேர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தியா கிரிக்கெட் அணியின் முதிர்ச்சி பெற்ற இரண்டு கேப்டன்களும் ஒரங்கட்டப்பட்டது. ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…