இதன் பின்னர் கேப்டன் சிம்ரன் சிங்கும், அயுஷ் படோனியும் கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கினர். சுழற்பந்து வீச்சாளர் துல்ஷானின் ஒரே ஓவரில் படோனி 4 சிக்சர்களை பறக்க விட்டு பிரமாதப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் நிபுன் மலிங்காவின் ஓவரில் சிம்ரன் சிங் 3 சிக்சர்கள் விரட்டியடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவர்கள் 79 ரன்களை திரட்டினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. கேப்டன் சிம்ரன் சிங் 65 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), படோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மதுஷ்கா பெர்னாண்டோ 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் தேசாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷ் தியாகி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 318 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தோல்வி பக்கமே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பையை இந்திய ஜூனியர் அணி உச்சிமுகர்வது இது 6-வது முறையாகும். சமீபத்தில் சீனியர் ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி பட்டத்தை வென்றது நினைவு கூரத்தக்கது.
DINASUVADU
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…