இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இங்கிலாந்து அணி …!ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி !

Published by
Venu

இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் தாமதமாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதை தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 29,விராட் 23 ரன்கள் அடித்தனர்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அன்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. குக்(21), ஜென்னிங்ஸ்(11), ரூட்(19), போப்(28), பட்லர் (24) என சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடியதோடு, சீரான வேகத்தில் ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

அதனால், அதிகபட்சம் 200 ரன்களை எட்டும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பெர்ஸ்டோவ் 76 பந்துகளிலும், வோக்ஸ் 71 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் இந்திய பந்து வீச்சுகளை சிதறடித்தனர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அவ்வளவும் எளிதில் முறியடிக்கவில்லை.
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெர்ஸ்டோவ் 93 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்திய அணி 107 ரன்னில் சுருண்ட நிலையில், இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

22 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

30 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

39 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

47 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

54 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago