இங்கிலாந்து அணி வெற்றி …!!

Default Image

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது. 
பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் டாஸ்ஸில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை  தேர்வு செய்தது.இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்  இழப்புக்கு  273 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக  தசுன் சானக 66 ரன்களும் நிரோஷன் திக்வெல்ல 52 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின்  முஈன் அலி 55 ரன்கள் கொடுத்து  02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
274 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  இங்கிலாந்து 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் தொடர்ந்து ஆட்டத்தை தொடரமுடியாத நிலையில் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்