இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹனுமா விகாரி முதலாவது அரைசதத்தை அடித்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 89,குக் 71 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4, பூம்ரா மற்றும் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷிகர் தவான் ப்ராட் பந்து வீச்சில் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ராகுல் இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார்.அதேபோல் புஜாரா 37 ,ரகானே 0 , விராட் 49,பண்ட் 5 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக அறிமுகமான ஹனுமா விகாரி அரைசதம் அடித்துள்ளார்.இது அவருக்கு முதல் அரை சதம் ஆகும் .இந்திய அணி 71 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் ஹனுமா விகாரி 50, ஜடேஜா 28 ரன்களுடன் உள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…