அதிர்ச்சி செய்தி!! மாரடைப்பு வந்து மைதானத்திலேயே உயிரிழந்த இந்திய கிரிக்கெட் வீரர்!!
கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் ஆடிய முன்னாள் வீரர் மைதானத்திலேயே மாரடைப்பு வந்து தனது உயிரை இழந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆடியவர் ராஜேஷ்.
இவர் சமீப காலமாக ரஞ்சி அணியில் இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார். நேற்று கோவாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகயில் 30 ரன்கள் சேர்த்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென ஆடுகளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
என்ன என்று பார்த்த போது அவர் மாரடைப்பில் கீழே விழுந்தது தெரியவந்தது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே தனது உயிரை இழந்து விட்டார். இதற்காக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.