கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா..!

Default Image

கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 61-ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லூயிஸ் டயாஸ் ஒரு கோலை அடித்தார்.

இதனால் இரு அணிகளும் சமமான கோல் கணக்கில் இறுதி நேரம் வரை இருந்தனர். பின்னர் மேலும் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணத்தால் பெனால்ட்டி சூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அர்ஜென்டினா அணி 3 கோல்களும், கொலம்பியா அணி 2 கோல்களும்  அடித்தனர்.

கொலம்பியா அணியின் கோலை 3 முறை அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அருமையாக தடுத்து தள்ளிவிட்டார். அதனால், 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி கொலம்பியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் கால் வைத்துள்ளது. இறுதி போட்டியில் பிரேசில் அணியுடன் அர்ஜென்டினா அணி விளையாட இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்