அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 85 கோடி வரை செலவு செய்யலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் 3.2 கோடியே கையிருப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சென்னை அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் அவர்களின் ஜெர்சி நம்பரை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டு உள்ளது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஜெர்சி நம்பரான 7 இடம்பெற்று உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலகக்கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட கலந்து கொள்ளாத தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…