மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!

Default Image

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 33 ரன்னும், ரோகித் 12 ரன்களில் வெளியேறினர்.

பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். திவாரி 42 ரன்கள் விளாசினார். மத்தியில் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.

 163 இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினார். தொடக்க வீரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், டு பிளிஸ்சிஸ் அம்பத்தி ராயுடு களமிறங்கினார். நிதானமாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு நடப்பு தொடரில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்து 71 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா களமிறங்கி 10 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் அரைசதம் நிறைவு செய்து 58* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

கடைசியாக சென்னை அணி 19.2 ஓவரில்  5 விக்கெட்டை பறிகொடுத்து 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், பும்ரா, க்ருனல் பாண்டியா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர்  தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்