Chennai Open:மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் 17 வயதான லிண்டா

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் 17 வயதான லிண்டா, போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வென்று  சாம்பியன் பட்டத்தை  வென்றார் லிண்டா.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெற்றிக்கான சாம்பியன்ஷிப் கேடயத்தை வழங்கினார்.

இரட்டையர் இறுதி போட்டியில் கனடாவின் கேப்ரியல்லா-பிரேசிலின் லுசா ஜோடி  6-1,6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா லின்கோவா-ஜார்ஜியாவின் நடிலா ஜோடியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Chennai Open:மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் 17 வயதான லிண்டா