10 அணிகளுக்கு இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக்( ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை நேரு மைதானத்தில் 26 வது லீக் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சென்னை எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. இரண்டு முறை சாம்பியனான சென்னை எப்சி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் டிராவும் , மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது.
கடந்த 25-ம் தேதி ஐதராபாத் அணியுடன் விளையாடிய போட்டியில் சென்னை எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.ஒடிசா அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் டிராவும், 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் இரண்டு அணிகளும் இரண்டாவது வெற்றியை பெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று விளையாட உள்ளனர். இதனால் போட்டிக்கு பஞ்சமிருக்காது இப்போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கு முன் கடந்த 25-ம் தேதி ஐதராபாத் அணியுடன் வெற்றி பெற்றபோது சென்னை எப்சி இதே மைதானத்தில் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…