சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது நிர்வாகம்.
இந்திய கால்பந்தில் முக்கிய போட்டியான ஐஎஸ்எல் லீக்கில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி அணி.சென்னை அணியால் கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முடிவில் கடைசி இடத்தையே பெற முடிந்தது. இந்த வருடம், ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரி நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அணி சரியான பாதையில் செல்வதற்காக இரு தரப்பும் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜான், அணியைச் சிறப்பாக வழிநடத்தி 2-வது ஐஎஸ்எல் பட்டம் வெல்ல உதவினார். ஏஎஃப்சி கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் ஐஎஸ்எல் அணி என்கிற பெருமையை அணிக்கு அளித்தார். ஜானின் அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள் என்று சென்னையின் எஃப்.சி அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…