உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்று பல நாடுகளில் விளையாட்டு போட்டிகளை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், வரும் ஏப்ரல் 15ம் தேதி வர வெளிநாட்டு பயணிகளுக்கு விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் வரும் 29ம் தேதி முதல் 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதால், போட்டியை காண அதிகமான ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என்று போட்டியை ஒத்திவைக்க கோரி சிலர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த சூழலில் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை விசாவை ரத்து செய்துள்ளதால், ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், பொதுவாக ஐபிஎல் டி20 போட்டியில் விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில்தான் வருவார்கள். மத்திய அரசு விசாவை ரத்து செய்துள்ளதால், ஏப்ரல் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அதன்பின் பி2 விளையாட்டு விசாவில் வர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 14ம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…