ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுதாக்கல் செய்துள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய மற்றும் மாநில விளையாட்டு அமைப்புகளுக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறக்கூடிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
ஹாக்கி விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவி வருகிறது. இருந்தபோதிலும் இந்த கருத்து அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஹாக்கி விளையாட்டில் உலகில் சிறந்த ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாட்டு 41 ஆண்டுகளாக பதக்க வாய்ப்பை தவறவிட்டது.
தற்போது டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்தியா வெண்கலம் வென்றது. அதனால் ஹாக்கி விளையாட்டை இந்திய தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…