#BREAKING : பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை…!

Default Image

இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே பாராலிம்பிக்கில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், நான்காவதாக தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்