டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் உறுதி செய்யப்பட்டது. முதல் சுற்றில் 66.95 மீட்டரும், இரண்டாவது சுற்றில் 68.08 மீட்டர் வீசி முதலிடத்தில் இருந்த நிலையில், மூன்றாவது சுற்றில் 68.55 மீட்டர் வீசி தங்கத்தை உறுதி செய்தார்.
இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தற்போது தங்கம் பதக்கம் வென்றார். 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே, மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று நிலையில், தற்போது இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இதுவரை இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…