பிசிசிஐ தலைவராக "தாதா' கங்குலி"..!

Default Image

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசி நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தை சார்ந்த என் ஸ்ரீனிவாசன் , குஜராத் சார்ந்த பிரிஜேஷ் படேலை முன்னிறுத்தி நிலையில் பல மாநில கிரிக்கெட் சங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அனைவரும் ஒருமனதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,தற்போதைய மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான  கங்குலியை தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் , மேலும் முன்னாள் தலைவரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளர் பதவிக்கு நிறுத்தப்படுவதாக தெரிகிறது.
இந்த மூன்று பகுதிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றும் , சீனிவாசன்நிறுத்திய பிரிஜேஷ் படேலை ஐபிஎல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்