இந்தியா-இலங்கை இடையிலான போட்டியில் பதாகை கட்ட ரசிகர்களுக்கு தடை..!

Default Image
  • நாளை இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
  • போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பேனா போன்றவற்றை எடுத்து வரவும் , வீரர்கள் சிக்ஸர் , பவுண்டரி அடிக்கும் போது காட்டப்படும் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அசாம் மாநில கிரிக்கெட் வாரியம் நாளை நடைபெற உள்ள போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.ஏன்னென்றால் தற்போது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் அசாம் , டெல்லி போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளது.

இதையடுத்து நாளை  இந்தியா-இலங்கை போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பேனா போன்றவற்றை எடுத்து வரவும் , வீரர்கள் சிக்ஸர் , பவுண்டரி அடிக்கும் போது காட்டப்படும் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெறும் போட்டியின் போது ஏராளமான ரசிகர்கள் குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்