பேட்மிண்டன் தொடர்: காலிறுதியில் சிந்து தோல்வி.!

Default Image

2020ம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி ஒகுஹாராவிற்கு அதிர்ச்சி கொடுத்தார். 

இதையடுத்து தொடர்ந்த 2வது செட்டில் சிறப்பாக விளையாடிய ஒகுஹாரா 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். பின்னர் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 13-21 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம் ஜப்பானின் ஒகுஹாரா 12-21, 21-15, 21-13 என்ற செட் கணக்குகளில் சிந்துவை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்