நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), 4-6, 6-1, 6-1 டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினர்.
இந்நிலையில், இப்போட்டியின் போது நாற்காலி நடுவரைக் திட்டியதற்காகவும், அவரை ‘சின்னப் பூனை’ என்று அழைத்ததற்காகவும், உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆஸ்திரேலியாவுக்கு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக $ 8,000 மற்றும் தவறான நடத்தைக்காக $ 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியின் போது சிட்சிபாஸின் தந்தை தனது மகனுக்கு விதிகளை மீறி அறிவுரைகளை வழங்குவதைக் காண முடிந்தது. ஆனால், நடுவரின் அலட்சியத்தால் பொறுமை இழந்த மெத்வதேவ் இடைவேளையின் போது நாற்காலி நடுவரை கோபமாகப் பார்த்து திட்டினார். என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…