ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள் அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, வெறும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதிபோட்டியில் ஷபாலி வர்மா சொதப்பியதால் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…