சொதப்பல் ஆட்டத்தால் இந்திய வீராங்கனையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்.!

Default Image

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.  அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள்  அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, வெறும் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதிபோட்டியில் ஷபாலி வர்மா சொதப்பியதால் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price
Ilaiyaraaja Symphony
virat kohli about aus