ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே 63 ரன்களும், உஸ்மான் கவாஜா 42 ரன்களும், வார்னர் 38 ரன்களும், மிட்செல் மார்ஷ் 41 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 264 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபீக் 62, கேப்டன் ஷான் மசூத் 54, முகமது ரிஸ்வான் 42, அமீர் ஜமால் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டையும், நாதன் லியோன் 4 விக்கெட்டையும் பறித்தனர்.
இதற்கிடையில் 54 ரன்கள் முன்னிலை உடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு 2-வது இன்னிங்ஸில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டு பந்திலே உஸ்மான் கவாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லாபுஸ்சாக்னே 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இருப்பின் மறுபுறம் விளையாடி வந்த டேவிட் வார்னர் ஆறு ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டிராவிஸ் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து கொடுத்தது. பின்னர் மிட்செல் மார்ஷ், ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை நிதானமாக விளையாடி அணியை மீட்டுக் கொண்டு வந்தனர் இதில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 130 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்து சத்தத்தை தவறவிட்டு வெளியேறினார் அதில் 13 பவுண்டரை அடங்கும்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்மித் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 62.3 ஓவரில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 187 ரன்கள் எடுத்து 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…