ISLFootball: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஏ.டி.கே. மோகன் பகான்.. 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி!

Published by
Surya

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் 7-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், அரையிறுதி போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதியது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இரு அணிகளும் சிறப்பாக ஆடியது. முதல் சுற்றில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் ட்ராவில் முடிந்தது. அதன்பின் நேற்று நடந்த போட்டி, சூடு பிடித்தது. போட்டி தொடங்கிய 38-வது நிமிடத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, முதல் கோலை அடித்தது. பின்னர், 68-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக கவுகாத்தி அணி, 74-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

81-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு லட்டு போல ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அந்த அணியின் லூயிஸ் மச்சடோ அடித்தார். அப்பொழுது அவர் கோல் கம்பத்திற்கு வெளியே பந்தை அடித்து பெனால்டியை வீணாக்கினார். இதனால் ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியாக ஏ.டி.கே. மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது.

முதலாவது ஆட்டத்தின் முடிவையும் சேர்த்து ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைதொடர்ந்து வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எப்.சி.யுடன் மோதவுள்ளது.

Published by
Surya

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

6 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

7 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

9 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

11 hours ago