ISLFootball: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஏ.டி.கே. மோகன் பகான்.. 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி!

Published by
Surya

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் 7-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், அரையிறுதி போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதியது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இரு அணிகளும் சிறப்பாக ஆடியது. முதல் சுற்றில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் ட்ராவில் முடிந்தது. அதன்பின் நேற்று நடந்த போட்டி, சூடு பிடித்தது. போட்டி தொடங்கிய 38-வது நிமிடத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, முதல் கோலை அடித்தது. பின்னர், 68-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக கவுகாத்தி அணி, 74-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

81-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு லட்டு போல ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அந்த அணியின் லூயிஸ் மச்சடோ அடித்தார். அப்பொழுது அவர் கோல் கம்பத்திற்கு வெளியே பந்தை அடித்து பெனால்டியை வீணாக்கினார். இதனால் ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியாக ஏ.டி.கே. மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது.

முதலாவது ஆட்டத்தின் முடிவையும் சேர்த்து ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைதொடர்ந்து வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எப்.சி.யுடன் மோதவுள்ளது.

Published by
Surya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago