Saravanan [Image source : X/@toisports]
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டியில், 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.இதில் 699 இந்திய வீரர், வீராங்கனைகளை 39 போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான டிங்கி ஐஎல்சிஏ-7 பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்னு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்த பாய்மரப்படகு போட்டியில் 34 புள்ளிகளைப் பெற்று விஷ்னு சரவணன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவிற்காக வெண்கலம் வென்ற விஷ்னு சரவணன் தமிழகத்தின் வேலூரைச் சேந்தவர் ஆவார். இந்த போட்டியில் சிங்கப்பூரின் ஜுன் ஹான் ரியான் லோ 26 புள்ளிகளை பெற்றுத் தங்கம் வென்றுள்ளார். அதோடு தென் கொரியாவின் ஜீமின் எச்ஏ 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சரவணன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் பாய்மரப் படகு போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 62 தங்கம், 35 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 110 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…