ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்றார் ஐஸ்வரி தோமர்!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற 15வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 22 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இறுதிப் போட்டியில் 463.5 புள்ளிகளை எடுத்து தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் தியான் ஜியாமிங் 462.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீரர் டு லின்ஷு 450.3 புள்ளிகளுடன் வெண்கலம் பதக்கமும் வென்றனர். ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தகுதிச் சுற்றில் 591 ரன்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். தோமர், ஸ்வப்னில் குசலே மற்றும் அகில் ஷியோரன் ஆகிய இந்தியர் மூவரும் சீனாவை (1777) பின்னுக்குத் தள்ளி 1764 ரன்களுடன் அணி வெள்ளி வென்றனர்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி – இந்திய அணி 4வது அசத்தல் வெற்றி!

மேலும், குசலே மற்றும் ஷியோரன் மூலம் இந்த நிகழ்வில் இந்தியா ஏற்கனவே அதிகபட்சமாக இரண்டு ஒலிம்பிக் கோட்டா இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது பாரிஸ் கேம்ஸ் ஒதுக்கீட்டை குசலே வென்றிருந்தார்.

இந்த ஆண்டு பாகுவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஷியோரன் அதையே செய்தார். இதனிடையே, தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

37 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

54 minutes ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago