Neeraj Chopra
கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியில் உள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
அதன்படி, நிராஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் வென்றுள்ளார். அவரைத்தொடர்ந்து, இந்தியாவின் ஜெனா கிஷோர் குமார் 87.54 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 82.68 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்த ஜப்பான் வீரர் ரோட்ரிக் ஜென்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் இரண்டு பதக்கங்கள் சேர்ந்துள்ளது. இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 81 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இன்றைய நாளில் இந்தியா ஒரே பதிப்பில் தனது சிறந்த ஆசிய விளையாட்டு பதக்க எண்ணிக்கை சாதனையை முறியடித்துள்ளது. அதன்படி, இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது. தற்போது, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 81 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…