கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியில் உள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
அதன்படி, நிராஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் வென்றுள்ளார். அவரைத்தொடர்ந்து, இந்தியாவின் ஜெனா கிஷோர் குமார் 87.54 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 82.68 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்த ஜப்பான் வீரர் ரோட்ரிக் ஜென்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் இரண்டு பதக்கங்கள் சேர்ந்துள்ளது. இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 81 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இன்றைய நாளில் இந்தியா ஒரே பதிப்பில் தனது சிறந்த ஆசிய விளையாட்டு பதக்க எண்ணிக்கை சாதனையை முறியடித்துள்ளது. அதன்படி, இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது. தற்போது, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 81 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…