ஒரு ரசிகனாக சொன்னால் தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும்.! முன்னாள் இந்திய கேப்டன் கருத்து.!

Default Image
  • கபில்தேவ்விடம் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், தோனி ஒரு வருடமாக எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்வது நியாயமல்ல என்றும் கபில்தேவ் கூறினார். மேலும் தோனி அதிக போட்டியில் விளையாட வேண்டும் என்றும் கபில்தேவ் வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்