Argentina [Image source : X/@Argentina]
ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த போட்டி, சிறிது நேரத்தில் அர்ஜென்டினா அணி பந்தைக் கைப்பற்றியது.
அர்ஜெண்டினா கோல் அதிக முயற்சி செய்தும் அதனை பிரேசில் தடுத்து வந்தது. இதனால் முதல் பாதி சமமான ஸ்கோருடன் முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் ஆரம்பத்திலேயே பிரேசில் அணிக்கு சாதகமாக போட்டி தொடங்கியது. முதல் சில நிமிடங்கள் கோலை அடிக்க முயற்சி செய்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா அணிக்கு கார்னர் கிக் மூலம் கோல் அடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இதை பயன்படுத்தி 63 வது நிமிடத்தில் நிக்கோலஸ் ஓட்டமெண்டி, கார்னர் கிக்கில் பறந்து வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தது.
இறுதியில் முழு நேரம் முடியும் வேளையிலும், பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் அணிக்கு எதிராக அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் சொந்த மண்ணில் பிரேசில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…