தற்போது தென்ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம்16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகளை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது.இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 297 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர் பதிரானா இந்திய அணி பேட்டிங் செய்த போது 4-வது ஓவரை வீசினார். அவரது பந்தை இந்திய வீரர் யாஷவி ஜெயிஸ்வால் எதிர்கொண்டார். அப்போது பதிரானா பந்தை 175 கி.மீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகவேகத்தில் வீசப்பட்ட பந்தாக அது அமைந்தது.
இதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் வீசினார். அதுவே இதுவரை சர்வதேச போட்டியில் வேகமாக வீசப்பட்ட பந்தாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பதிரானா தகர்த்துள்ளார்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…