சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை.. போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்.!

Published by
murugan

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 27 வருடம் கழித்து வெற்றி பெற்று  கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக  இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் உலகக்கோப்பை போது  தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த இலங்கை பேட்டிங் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் அந்த போட்டியின் தொடக்க பேட்ஸ்மேன் உபுல் தரங்கா ஆகியோரின் அறிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்,  கடந்த  2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த சங்கக்காரா மற்றும்  ஜெயவர்த்தனே ஆகியோரிடம் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் 8 மணித்திற்கு மேலாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

இவர்களிடம் விசாரணை நடத்தும்போது விளையாட்டு அமைச்சக அலுவலகத்தின் வெளியே, சங்கக்காரா மற்றும்  ஜெயவர்த்தனே விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published by
murugan

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago