வங்காளதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா வருகின்ற மார்ச் மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உலக லெவன்-ஆசிய லெவன் அணிகள் மோதும் 20 போட்டிகளை நடத்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
வங்கதேச அணி சார்பில் நடத்தப்படும் ஆசிய லெவன் அணியில் விளையாட தோனி ,பும்ரா மற்றும் கோலி உள்ளிட்ட வீரர்களை விளையாட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வீரர்கள் இணைந்து விளையாடுவார்கள் என ரசிகர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஆசிய போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆசிய லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள் விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அப்போது பிஎஸ்எல் தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆசிய லெவன் அணி வீரர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்த போட்டி நடைபெறும் போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளனர். அதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இதில் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து உண்மையான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…