மராத்தான் வீரர் வில்சன் கிப்சாங்கிற்கு 4 ஆண்டு தடை.!

Published by
murugan

கென்யாவின் முன்னாள் மராத்தான் வில்சன் கிப்சாங்கிற்கு ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்து விபத்தின் போலி புகைப்படத்தைப் பயன்படுத்திய போன்ற காரணங்களுக்காக நான்கு ஆண்டு தடை.

கடந்த 2012 -ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் கிப்சாங். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு  தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு பிரிவிற்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. மேலும், சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார்.

கடந்த 2019 மே 17 அன்று சோதனைக்கு அழைத்த போது விபத்து நடந்தாக கூறி காரணமாக சோதனைக்கு வரவில்லை,  விபத்துக்குள்ளான புகைப்படத்தை ஊக்கமருந்து எதிர்ப்பு பிரிவிற்கு அனுப்பி உள்ளார். ஆனால், அந்த புகைப்படம் ஆகஸ்ட் 19, 2019 அன்று ஏற்பட்ட விபத்தில் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோல 4 முறையும் தவறான தகவல் கொடுத்துள்ளார்.

கடந்த 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago