சென்னை : கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்து வரும் ரொனால்டோ தற்போது டிஜிட்டல் உலகிலும் புதிய சாதனையை படைத்துள்ளார்.ரோனல்
உலகில் முக்கிய மற்றும் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் பல முன்னணி கிளப்பிற்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியா கால்பந்து லீகில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்போதுமே தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் விளையாட்டு வீரர்களுள் ஒருவர் ஆவார். இவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதளவு பேசும் பொருளாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்படி நேற்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு பதிவிட்டார். அந்தப் பதிவில் தான் ஒரு புதிய யூட்யூப் சேனல் உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்.
அவர் அறிவித்த சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன்பிறகு அந்த சேனலில் ரொனால்டோ தொடர்ந்து11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோக்கள் அனைத்தும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரட்டை அடிக்கவும் வீடியோவாக அமைந்திருந்தது.
மேலும், அந்த யூடியூப் சேனலில் ரொனால்டோ கால்பந்து குறித்து வீடியோக்களை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ரொனால்டோ கால்பந்திலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.
மேலும் இந்த யூ-டியூப் சேனல் தொடங்கிய 1 மணி நேரத்தில் R. Cristiano சேனலை 4 மில்லியன் பயனர்கள் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதனால், யூட்யூபில் குறைவான நேரத்தில் அதிக சப்ஸ்க்ரைபர்களை உருவாக்கியவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
மேலும், இவர் ஏற்கனவே எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். இதை விட ஆச்சர்யம் அடையும் விஷயம் என்னவென்றால் ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…