FIFA WorldCup2022: 3-வது இடம் யாருக்கு? குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதல்.!

Default Image

ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.

முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது இடத்திற்கான போட்டியில் இன்று இரு அணிகளும் மோதுகின்றன.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் உலகக்கோப்பைக்காக மோதுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்