உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை தாங்கமுடியாமல் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இடங்களில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவின் பெலியத்தோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ராகுல் லோகர் (23) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தன. ராகுலின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்வதாகவும், இறுதிப் போட்டியைக் காண ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்ததாகவும் கூறினார்.
அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததைக் கண்டு வருத்தமடைந்து தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அதே நேரத்தில், ஒடிசாவின் ஜாஜ்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டி முடிந்தவுடன் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தேவ் ரஞ்சன் தாஸ் என்ற 23 வயது இளைஞர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்துகொண்டார்.
தாஸின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘மனநிலை தொடர்பான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இறுதிபோட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து தாஸ் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…