இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா என் 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும் , ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.
இதை தொடர்ந்து இன்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். இதில் ஹம்சா 62 , பவுமா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி சார்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும் , முகமது சமி ,நதீம் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. குவின்டன் டி காக் , கிளாசென் தலா 5 ரன்னும் , ஹம்சா , பவுமா இருவரும் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.இந்திய அணி சார்பில் ஷமி 3 , உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…