உலகில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் வரும் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இந்த கொரோனா பெருந்தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை அனைத்து வித போட்டிகளையும் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தன. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பான (ஐடிஏ) வரும் ஜூலை 31 தேதி வரையிலான அனைத்து வித டென்னிஸ் போட்டிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஏடிபி தலைவர் கவுடென்சி கூறியதாவது, ‘ தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் பாதுகாப்பாக நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் ஜூலை மாதம் நடைபெற இருந்த நான்கு மகளிர் டென்னிஸ் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ரோஜர் கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதற்காக அரசுகளிடம் பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்று போட்டி டென்னிஸ் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…