கொரோனா பாதிப்பு எதிரொலி… அனைத்து வித டென்னிஸ் போட்டிகளும் ஜூலை 31வரை ரத்து….

Default Image

உலகில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் சர்வதேச டென்னிஸ்  போட்டிகள் அனைத்தும் வரும்  ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் இந்த கொரோனா பெருந்தொற்றால் கடந்த  மார்ச் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை  அனைத்து வித போட்டிகளையும் ரத்து  செய்யப்படுவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தன. இந்நிலையில், கொரோனா  தொற்று அதிகரித்து வரும் நிலையில்  சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பான  (ஐடிஏ) வரும்  ஜூலை 31 தேதி வரையிலான அனைத்து வித டென்னிஸ் போட்டிகளும்  இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து  ஏடிபி தலைவர்  கவுடென்சி கூறியதாவது, ‘ தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,  ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் பாதுகாப்பாக நடத்துவதற்கான  வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும்  ஜூலை மாதம்  நடைபெற இருந்த நான்கு  மகளிர் டென்னிஸ் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ரோஜர் கோப்பை  போட்டி அடுத்த ஆண்டுக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும்  ரசிகர்கள் இல்லாமல்  விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதற்காக அரசுகளிடம் பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்று போட்டி  டென்னிஸ் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்