#Breaking : சத்தீஸ்கரில் கோர விபத்து.! சுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் பலி.! பலர் படுகாயம்.! மீட்புப்பணிகள் தீவிரம்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கம் வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் அதில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுளளன.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் சுண்ணாம்பு கற்கள் எடுக்கும் சுரங்க வேலையில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாநில பேரிடர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜேசிபி எந்திரம் மூலம் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment