கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி..!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அவர்கள், 100-வயதை கடந்துள்ள நிலையில், தனது உடல்நலக்குறைவால், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – முதல்வர் அறிவிப்பு

சங்கரய்யா அவர்களை கே.பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க செல்ல வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.