Chandrayaan-3 Mission [Image Source : Twitter/@isro]
சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்து உள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனை அடுத்து சந்திராயன்-3 ஆகஸ்ட் 5, 2023இல் நிலவின் சுற்றுப்பாதை முழுதாக செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தது.
அதன்படி, தற்போது விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 நிலவுக்கு மிக அருகில் (பெரிலூன்) இருக்கும் போது இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேற்கண்ட முயற்சிகள் வெற்றி பெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…