அறிவியல்

Aditya L-1: நாளை சூரியனுக்கு பறக்குறோம்.! 24 மணி நேர கவுன்டவுனைத் தொடங்கியது இஸ்ரோ.!

Published by
செந்தில்குமார்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுட்டுள்ளது.

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் நாளை காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலமானது சூரியனை நோக்கி ஏவப்பட்டவுடன், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக்கப்படும்.

இந்த விண்கலத்தை எல்-1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் (Halo Orbit) வைப்பதால், சூரியனை எந்த ஒரு கிரகண மறைவும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து தகவல்களை அனுப்ப முடியும்.

ஆதித்யா எல்-1 விண்கலம், மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களைப் பயன்படுத்தி, ஃபோட்டோஸ்பியர் எனப்படும் சூரியனின் ஒளிரும் மேற்பரப்பு, குரோமோஸ்பியர் எனப்படும் நடுத்தர மேற்பரப்பு மற்றும் மெல்லிய வெப்ப வாயுக்களால் உருவான சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு எனப்படும் கரோனா ஆகியவற்றைக் ஆய்வு செய்ய ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன. மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை (செப்-2) காலை 11.50 மணியளவில் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான, 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கவுன்டவுன் முடிவடைந்தவுடன் சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் பயணம் தொடங்கிவிடும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

23 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

27 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

41 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

54 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago