நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. தூக்குல போடுங்க… கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி கண்ணீருடன் பேட்டி.!

எங்களை நம்பவச்சி ஏமாத்திடாங்க.. இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க என கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா பேட்டியளித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவரை, அவரது மனைவி சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட சிலர் கே.ஆர்.பி அணை அருகே நடு ரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

நீதிமன்றத்தில் சரண் :

காதல் திருமணத்தை எதிர்த்து நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவ கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரம் சட்டமன்றம் வரை விவாத பொருளானது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட 3 பேர் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் சரண் அடைந்துவிட்டனர்.

கண்ணீர்மல்க பேட்டி :

இந்நிலையில் தன் கணவர் இறப்பு குறித்து மனைவி சரண்யா கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. என்றும், எனக்கு அப்பாவாக, அம்மாவாக உடன் இருந்து பார்த்து கொண்டவர் எனது கணவர் என அழுதுகொண்டே கூறினார்.

மேலும், எனது கணவர் கொலைக்கு காரணமானவர்களை தூக்கிவிட வேண்டும் என கண்ணீர் மல்க கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா சேத்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment