Sambar : காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பருப்பு – 2 கப்
  • கடுகு – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • பெரிய வெங்காயம் – 2
  • வரமிளகாய் – 4
  • தக்காளி – 4
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து குக்கரில் வைத்து நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவித்து வைத்துள்ள பருப்பு அதனுள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த பின் அதனை இறக்கி கொத்தமல்லி தலையை தூவி பரிமாறலாம். இப்போது சுவையான சாம்பார் தயார்.

நாம் தினமும் பலவகையான காய்கறிகளை சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால் ,காய்கறிகளே இல்லாமல் இந்த சாம்பார் சுவையாக இருப்பதுடன், மிக குறைந்த நேரத்திலேயே இந்த சாம்பாரை தயார் செய்துவிடலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.