சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.சபரிமலை விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.