ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல்.!

ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வருகின்ற 14-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில், முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தேசிய ஜநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க பாஜக மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக, கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில், தேர்தல் நாளன்று, அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்