கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும்.
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது.
நமது முன்னோர்களின் காலத்தில் இன்று காணப்படக் கூடிய சொகுசு வாழ்க்கை இருக்கவில்லை. காலை முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை, கடினமான கஷ்டத்தோடு வேலை செய்வதுண்டு. ஆனால் இன்று, சமைப்பது, துணி துவைப்பது என அனைத்துமே எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. நமது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியம்.
தற்போது இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு
பாயில் படுத்து உறங்குவது உடலுக்கு குளிர்ச்சியானது. எனவே கர்ப்பிணி பெண்களின் உடல் எப்போதும் அதிகமான சூடாக இருப்பது நல்லதல்ல. எனவே, உடல் வெப்பம் அதிகமாக உள்ள கர்ப்பிணி பெண்கள், பாயில் படுத்து உறங்கினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
அதேபோல் பாயில் படுத்து உறங்குவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பெலும்பு விரிவடையும். இதனால், சுக பிரசவம் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் முதுகுவலி, இடுப்புவலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. அதே போல் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது, பிறந்த குழந்தைகளையும் பாயில் படுக்க வைப்பது நல்லது.
பிறந்த குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், குழந்தைகளின் முதுகெலும்பு சீராவதுடன், கழுத்து சுளுக்கு பிடிக்காது. இப்படி குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், அவர்கள் வேகமாக வளர்வதுடன், குழந்தைகளின் உடலில் உள்ள சூட்டை தணிக்கவும் உதவுகிறது. எனவே, இந்த நடைமுறையை கடைபிடிப்பது தாய், சேய் இருவரின் நல்லது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…