பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.
லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவரால் பலருக்கும் தொற்றுநோய் பரவி இருக்கும் என சோதனை நடத்தப்பட்டு வருகிற நிலையில், இவர் தங்கியிருந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.