பாகிஸ்தானில் கடந்த சில வ்ருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இதற்கு முழு காரணமாக சொல்லப்படுவது பிரதமர் இம்ரான் கான் என்றும் அவரின் மோசமான அணுகுமுறையை இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இம்ரான் கானுக்கு எதிராக ஆளும் கட்சினர் முதல் கூட்டணி கட்சியினரே எதிராக திரும்பியுள்ளனர்.இதனை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த பவர் ஷோ ஒன்றில் பேசிய இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க லஞ்சம் கொடுக்க முன்வந்த எதிர்க்கட்சிகளின் சலுகைகளை மறுத்ததற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) சட்டமன்ற உறுப்பினர்களை பாராட்டினார். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
பிரதான எதிர்க்கட்சிகளான (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி) பற்றி அவர் குறிப்பிடுகையில், இந்த நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக “மூன்று எலிகள்” கொள்ளையடித்து வருகின்றன.
“கடந்த 30 ஆண்டுகளாக, அவர்கள் கூட்டாக நாட்டின் இரத்தத்தை உறிஞ்சி, வெளிநாட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளனர், வெளிநாட்டு கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நாடகம் எல்லாம் என்ஆர்ஓ (தேசிய நல்லிணக்க ஆணை)க்காக நடக்கிறது என்று கூறினார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…